தமிழக அரசு கைவிரிப்பு; மக்கள் அதிர்ச்சி
சென்னை,ஜூன் 18- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்கள் வேலை, வருமானமின்றி அவதிப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் வீடுகளுக்கான மின்கட்ட ணம் அதிகளவில் இருந்ததாக மக்கள் மத்தியில் குமுறலுடன் புகார் எழுந்தது. இதில், மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி வழக்கறிஞர் சி.ராஜேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கஜா புயல் போன்ற முந்தைய தேசிய பேரிடர்களின் போது நுகர்வோரின் கஷ்டங் களை அறிந்து மின்கட்டணம் தேதி நீட்டிக்கப்பட்டு ள்ளதாகவும் அதேபோல கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரண மாக மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நுகர்வோரி டம் இருந்து மின்கட்டணம் வசூலிக்க தடை விதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர பிற அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாகவும், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் மேலும் இது தொடர்பாக வரும் திங்கள் கிழமை தெரிவிப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு-குறு தொழில்கள் உள்பட அனைத்து தொழிற்கூடங் களும் மூடப்பட்டிருந்தன. இதனால் பெருவாரி யான மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல், வருமானம் இழந்து தவித்தனர். தற்போது தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும், இன்னும் வருமான வாய்ப்பு பெரிதாக உருவாகவில்லை. இந்நிலையில் மின்கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டால் நல்லது என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.